top of page
Search

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி நிறைவு: கர்நாடக மாநில திமுக புகழாரம்

  • Writer: Dhina mani
    Dhina mani
  • May 7, 2022
  • 1 min read

ree

பெங்களூரு, மே 7: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஓராண்டு ஆட்சி நிறைவடைந்ததையடுத்து கர்நாடக மாநில திமுக புகழாரம் சூட்டியுள்ளது.

இது குறித்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் ந. இராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில் திமுக‌ தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெறுகிறது. பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார், உலகத்தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றி, நல்லாட்சி தந்து இந்தியா மட்டுமல்ல உலகமே வியக்கும் வகையில் பொற்கால ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் திமுக தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை கர்நாடக மாநில திமுக சார்பில் பாராட்டுகிறோம். இதுதான் வளர்ச்சி, இதுதான் முன்னேற்றம், இப்படித்தான் ஆட்சி நடத்த வேண்டும் என்று உலகிற்கு உணர்த்தும் வகையில் திராவிட வரலாற்று அறிமுகம் செய்து, அதன்படி மக்களுக்கு புதிய விடியல் ஏற்படுத்தி வெற்றி நடைபோடும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசு புதிய வரலாறு படைத்துள்ளது. கடந்த ஆட்சியில் சீரழிந்து, வளர்ச்சி இல்லாமல் பின்னோக்கி இருந்த தமிழகத்தை தனது அயராத உழைப்பால், அறிவாற்றலால் மனித நேயத்தால் இன்று முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு வந்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கர்நாடக மாநில திமுக மற்றும் உலக தமிழர்கள் சார்பில் நன்றி மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 
 
 

Commentaires


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page