top of page
Search

தொற்றல்லாத நோய்கள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுவது அவசியம்: ககன்தீப் சிங்

  • Writer: Dhina mani
    Dhina mani
  • Mar 10, 2022
  • 1 min read

பெங்களூரு, மார்ச் 10: தொற்றல்லாத நோய்கள் தொடர்பான‌ கட்டுகதைகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுவது அவசியம் என்று அஸ்ட்ராஸெனேகா இந்தியாவின் நிர்வாக இயக்குநர் ககன்தீப் சிங் தெரிவித்தார்.

பெங்களூரில் வியாழக்கிழமை தொற்றல்லாத நோய்கள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுவது தொடர்பான யங் ஹெல்த் புரோகிராம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியது: யங் ஹெல்த் புரோகிராம் என்பது எங்களது முக்கிய உலகளாவிய சமூக முதலீட்டு முயற்சிகளில் ஒன்றாகும். திட்ட இந்தியாவுடன், துல்லியமான சுகாதாரத் தகவலை வழங்குவதற்கும், தொற்றல்லாத நோய்கள் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் களங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் உள்ளூரிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்தத் திட்டத்திற்குத் தங்கள் ஆதரவை வழங்கிய சுகாதார அதிகாரிகளுக்கும் எங்களுடன் இணைந்து பணியாற்றும் ப்ளான் இந்தியாவுக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், அவர்களின் ஆதரவு இல்லாமல் இவை எதுவும் சாத்தியமில்லை. தொற்றல்லாத நோய்கள் தொடர்பான‌ கட்டுகதைகள் குறித்து இளைஞர்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் நோக்கில் பெங்களூரில் எலஹங்கா, தாசரஹள்ளி, மகாதேவப்புரா ஆகிய பகுதிகளில் 3 சுகாதார தகவல் மையங்களை தொடங்கியுள்ளோம். இந்த 3 மையங்கள் மூலம், முதல் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் இளைஞர்களிடத்தில் சென்றடைவதையும், வரும் ஆண்டுகளில் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்குவதையும் இலக்காகக் கொண்டுள்ளோம். 2010-ஆம் ஆண்டு தில்லியில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், கடந்த பத்தாண்டுகளில் 4.60 லட்சதிற்கும் அதிகமான இளைஞர்களை நேரடியாகச் சென்றடைந்துள்ளது. 7,800க்கும் மேற்பட்ட சக கல்வியாளர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது. தில்லியில் 15 சுகாதார தகவல் மையங்கள் நிறுவப்பட்டது. 2019- ஆம் ஆண்டில், இத்திட்டம் தில்லிக்கு கூடுதலாக 2 சுகாதார தகவல் மையங்களுடன் தமிழ்நாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட்டது என்றார்.


 
 
 

Comentários


Post: Blog2_Post
  • Facebook
  • Twitter
  • LinkedIn

©2021 by Bangalore Dhinamani Daily. Proudly created with Wix.com

bottom of page